மதுரையில் முதல்வர் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாநகர் காவல் ஆணையர் ஆகியோருடன் ஆய்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மே 21 ல் முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதற்காக கோவையிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு முதல்வர் மதுரை வந்தார். மாவட்ட ஆட்சியர் திரு. அனீஸ் சேகர், மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் அவரை வரவேற்றனர். பின் அவர் அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 10 மணிமுதல் 10.45 வரை,கொரோனா தடுப்பு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.