Police Department News

மதுரை தேனி மாவட்டத்தில் போலீசார் பெற்றோர்களுக்கு அறிவுரை, குழந்தைகளுக்கு இலவச முக கவசம்

மதுரை தேனி மாவட்டத்தில் போலீசார் பெற்றோர்களுக்கு அறிவுரை, குழந்தைகளுக்கு இலவச முக கவசம்

கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கி அவர்களின் பெற்றோர்களை அழைத்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம், என்று அறிவுறுத்தி நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.