சென்னை: சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏஜாஸ்கான் (34) இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க முயற்சித்தார். நீண்ட நேரமாக இவர் பணம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், அந்த வழியாக ரோந்து வந்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் வெளிநாட்டில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு அவர் நேற்று கைது செய்யப்பட்டார். போலி ஏ.டி.எம். கார்டை தயாரித்து கொடுத்ததாக இக்பால் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
Related Articles
சப்இன்ஸ்பெக்டருக்கு;எஸ்.பி.பாராட்டு
சப்இன்ஸ்பெக்டருக்கு;எஸ்.பி.பாராட்டு திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறவன் குளம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற மாற்று திறனாளி ஒருவர் நேற்று வெயிலின் தாக்கத்தால் வலிப்பு வந்து நடுரோட்டில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அப்பகுதியில் சென்ற யாரும் உதவி செய்யாத நிலையில் அப்பகுதியில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறையின். மதுவிலக்கு அமலாக்கம் பிரிவின் 16, மாவட்டங்கள் 4, மாநகரத்தின் கண்காணிப்பாளர் டாக்டர். இரா.சிவகுமார்,IPS
தமிழ்நாடு காவல்துறையின். மதுவிலக்கு அமலாக்கம் பிரிவின் 16, மாவட்டங்கள் 4, மாநகரத்தின் கண்காணிப்பாளர் டாக்டர். இரா.சிவகுமார்,IPS. அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட […]
மது பாட்டில்கள் விற்ற இருவர் மீது வழக்கு
மது பாட்டில்கள் விற்ற இருவர் மீது வழக்கு டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா மற்றும் மதுரை வடக்கு மாவட்ட மேலாளர் ஆகியோரின் உத்தரவின் படி மேலூர் பகுதியில் வட்டாட்சியர் மற்றும் பறக்கும் படை அலுவலர் முருகன் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினருடன் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலூர் நகர் மற்றும் தும்பை பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 […]