இன்று மதுரை மாநகரில் தொடர் மழையின் காரணமாக பழங்காநத்தம் பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டதால் தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக JCP இயந்திரம் மூலம் சாலையை சீரமைத்து தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். போக்குவரத்து காவல்துறையினரின் பணியினை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.
தென்காசி மாரத்தான் போட்டியில் 5 வயது இரட்டையர்கள் சாதனை-கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தென்காசி பட்டாளம் தென்காசி மாவட்ட ராணுவ வீரர்கள் நடத்திய மாரத்தான் போட்டியில் 1,680 பேர் கலந்து கொண்டனர். இரட்டையர்கள் சாதனை அதில் இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் படிக்கும் மாணவர்கள், சீவநல்லூர் சட்டநாதனின் பேரன்கள் 5 வயதுடைய இரட்டையர்கள் புகழ்சட்டநாதன் மற்றும் மகிழ் சைலேந்திரன் இருவரும் சாதனை புரிந்துள்ளனர். மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் டிரோன் மோதியது- 2 பெண் என்ஜினீயர்கள் பிடிபட்டனர் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலுக்குள், மெட்டல் டிடெக்டர் பரிசோதனை மற்றும் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வெளியேயும் போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கோவில் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவில் கோபுரத்தின் மேற்பரப்பில் டிரோன் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண் என்ஜினீயர்கள் […]
போடி அருகே சத்துணவு அமைப்பாளரை தாக்கி பொருட்கள் சூறை! தேனி மாவட்டம் கோம்பை மதுரை வீரன் தெருவைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி மீனாட்சி (வயது 45). இவர் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (37). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் மீனாட்சியின் மகளை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கேரளாவுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று உறவினர் வீட்டு […]