இன்று மதுரை மாநகரில் தொடர் மழையின் காரணமாக பழங்காநத்தம் பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டதால் தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக JCP இயந்திரம் மூலம் சாலையை சீரமைத்து தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். போக்குவரத்து காவல்துறையினரின் பணியினை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.
இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.அருண் பாலகோபாலன் தகவல் தூத்துக்குடி 2019 நவம்பர் 12 ;தள்ளி வைக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18.11.2019 முதல் 20.11.2019 வரை நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிவிப்பு […]
மதுரை திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் பால்குடம் திருவிழா நேற்று மதுரை திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. மதுரை வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அலகு பறவை காவடிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து எடுத்து திருபரங்குன்றம் சென்றனர் இதற்கு எந்தவித போக்குவரத்து இடையூறு இல்லாமல் பக்தர்களின் பாதுகாப்பான வழிபாட்டிற்கு காவல் துறையினர் பாதுகாப்பளித்தனர்.காவல் உதவி ஆணையர் செல்வின் தெற்கு வாசல் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கனேஷ்ராம் அவர்கள் […]
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளிக்கு நிதி உதவி வழங்கிய திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர். பாலக்கோடு அருகே பிக்கன அள்ளி ஊராட்சி உமையன் கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி சின்னசாமி மகன் கோவிந்தராஜ் இவருக்கு ரேவதி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ள நிலையில் கடந்த 2 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையின் மின் விளக்கை ஆன் செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி […]