இன்று மதுரை மாநகரில் தொடர் மழையின் காரணமாக பழங்காநத்தம் பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டதால் தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக JCP இயந்திரம் மூலம் சாலையை சீரமைத்து தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். போக்குவரத்து காவல்துறையினரின் பணியினை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.
அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 6-வது பிளாட்பாரம் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் இறந்து கிடந்தார். அவர் கருப்பு, வெள்ளை கோடு போட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். இதேபோல் மாட்டுத்தாவணி டவுன் பஸ் நிறுத்தம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். இவர்களை பற்றி விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பார்ட்டி சகிதம் பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டச்சேரி காலனி சேட்டையன் சன் ஆப் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் பிஞ்சு என்ற சரண்ராஜ் என்பவரது வீட்டில் சுமார் 20 லிட்டர் கள்ளச்சாராயம் ஆக மொத்தம் 140 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றியும் அம்பேத்கர் நகரை சேர்ந்த தியாக ராஜன் மகன் அப்பாஸ் என்பவரது கொட்டகையில் சுமார் 50 கிலோ வேலம்பட்டை கைப்பற்றியும் மேற்படி […]
சாமனுர் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு. இருவர் கைது மற்றவர்கள் தலைமறைவு . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமனுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் (வயது.42), இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன் (வயது .48), வடிவேல்(வயது .47), அருள் பிரகாஷ்(வயது .42), பரந்தாமன்(வயது .46), கோவிந்தராஜ்(வயது .48), அசோகன்(வயது .47), கிருஷ்ணமூர்த்தி(வயது .48), ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது,மேலும் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் […]