இன்று மதுரை மாநகரில் தொடர் மழையின் காரணமாக பழங்காநத்தம் பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டதால் தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக JCP இயந்திரம் மூலம் சாலையை சீரமைத்து தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். போக்குவரத்து காவல்துறையினரின் பணியினை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.
கோடியூர் நெடுஞ்சாலையில் மினிசரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிகொண்டதில் டிரைவர் சாவு, பெண் படுகாயம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குளிக்காடு கிராமத்தை சேர்ந்த மினிசரக்கு வாகன ஓட்டுநர் முருகன் (வயது.39)இவர் நேற்று முன்தினம் மினி சரக்கு வாகனத்தில் காய்கறி பாரம் ஏற்றுவதற்க்கு இராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்துகொண்டிருந்தார்.அவருடன் மகேந்திரமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சங்கீதா (வயது. 30) என்பவரும் வந்து கொண்டிருந்தார்.கோடியூர் நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் […]
பாலக்கோடு இரயில்வே நிலைய வளாகத்தில் ஆட்கடத்தல் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இரயில்வே நிலைய வளாகத்தில் உலக மனித ஆட்கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் பாலக்கோடு வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி கே.கோபிநாத் அவர்களின் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது.இதில் சட்டவிரோதமாக குழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களை கடத்தி உடற் உறுப்புக்களை திருடுதல், குழந்தைகளை பிச்சை எடுக்க பயன்படுத்துதல், பெண்குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு […]
போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த வாலிபர் சாவு மதுரை மகபூப்பாளையம் டி.பி. மெயின் ரோடு பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரிமேடு போலீசார் அங்குள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் சோதனை நடத்தினர். அங்கு 8 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. அந்த பெண்களை மீட்ட போலீசார் அந்த கெஸ்ட் ஹவுசின் மேலாளர் ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த டார்வின், மகபூப்பாளையம் கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன், தல்லாகுளம் […]