இன்று மதுரை மாநகரில் தொடர் மழையின் காரணமாக பழங்காநத்தம் பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டதால் தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக JCP இயந்திரம் மூலம் சாலையை சீரமைத்து தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். போக்குவரத்து காவல்துறையினரின் பணியினை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.
மதுரையில் சாலை விதிகளை பின்பற்றாத ஷேர் ஆட்டோக்கள் மதுரை மாநகரில் பொது போக்குவரத்துக்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மதுரை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் மாற்று போக்கு வரத்துக்கான தேவை அதிகளவில் உள்ளது. இதனால் பொது மக்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஷேர் […]
விருதுநகர் மாவட்டம்:- திருவில்லிபுத்தூரில் சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… பெருகிவரும் வாகனத்தின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதனால் எதிர்பாராத விபத்தும் நடக்கின்றது. அதனை சீர்செய்யும் நோக்கில் தமிழ அரசின் சார்பில் திருவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல்துறையினர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியை ஏற்படுத்தியுள்ளனர். இருசக்கர வாகன விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தலைகவசத்தின் அவசியத்தையும் எடுத்துரைக்கும்விதம் இந்த பேரணி சின்ன கடை பஜார், பெரிய கடை […]
மதுரை தெற்கு மாசி வீதியில் சிறுமியிடமிருந்து முக்கால் பவுன் தங்க வலையலை திருடிய பெண்மணி கைது மதுரை தெற்கு மாசி வீதியில் வசிக்கும் அழகர் (40) என்பவர் நகைபட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.இவரின் இரண்டு மகள்களான ரித்மிக்கா (7) மற்றும் குறள் வெண்பா (2) ஆகியோர் வீட்டின் முன்பாக நடைபாதையில் நேற்று மாலை 4.45 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மூத்த மகள் தனது தந்தையிடம் குறள் வெண்பாவின் இடது கை வலையலை காணவில்லை என்று கூறியுள்ளார்.உடனே […]