கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காவலர்களுக்கு நோட்டீஸ்
சென்னையில் கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப் இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுள்ளது. காவல் துறையினரிடையே கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினரால் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணி புரியும் அனைத்து காவலர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சென்னை பெரு நகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போலீசார் அதற்கான காரணத்தை தெரிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள உடல் நிலை ஒத்துழைக்காது என்றால் அதற்கான மருத்துவ காரணத்தை சான்றுடன் அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். என காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலும் அதற்கான காரணத்தையும் கூறாமல் இருக்கும் காவலர்களுக்கு விரைவில் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தெரிவித்தனர்.