மீஞ்சூர், பொது சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு
தமிழ் நாட்டில் கொரோனா நோய் பரவல் அதி வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, பொது சுகாதாரத்துறை இன்றைய அறிக்கையில் சென்னை மீஞ்சூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை , 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இலவசமாக கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள் இதனை பயன்படுத்தி அனைத்து பொதுமக்களும் தங்களிடம் உள்ள ஆதார்அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டை இவைகளில் ஏதாவதொன்றை கொண்டு வந்து காண்பித்து இலவசமாக கொரோனா நோய் தடுப்பூ போட்டுக் கொள்ளும்படி அரசு ஆரம்ப சுகாதார மையம் கேட்டு்க் கொள்கிறது.