மதுரை மாவட்டம் பேரையூரில் ஊரடங்கு விதியை மீறி சைக்கிளில் டீ விற்றவர்களின் டீ கேன்கள் பறிமுதல்
மதுரை மாவட்டம், பேரையூரில், ஊரடங்கு உத்தரவை மீறி சைக்கிளில் டீ கேன் மூலமாக டீ விற்பனை செய்து வந்தனர் இவர்களிடம் டீ சாப்பி வருபவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நடந்து கொண்டனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று தெரிந்தும் டீ விற்பனை செய்தவர்களின், டீ கேன்களை டி.எஸ்.பி மதியழகன் அவர்களின் உத்தரவின் பேரில் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தேவையின்றி வெளியில் சுற்றி திரிந்தவர்களின் 5 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.