Police Recruitment

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட லெக்ஷிமி திருமண மஹாலில் வைத்து கடந்த 28 ம் தேதி திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 110 பேருக்கு அரிசி பை,மற்றும் காய்கறி தொகுப்புக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட லெக்ஷிமி திருமண மஹாலில் வைத்து கடந்த 28 ம் தேதி திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 110 பேருக்கு அரிசி பை,மற்றும் காய்கறி தொகுப்புக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் கொரோனா 2 வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 24 ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற 7 ம் தேதி அன்று காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த காலம் மிகவும் சிரமமாக இருக்கும். இதனை பொருத்துக் கொண்டு விதிமுறைகளை கடை பிடித்தால்தான் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நம் உயிரை காப்பாற்ற முடியும். மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ளவேண்டும் சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்களாகிய நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முடியும். என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் செய்திருந்தனர்.

இதில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைகதிரவன் அவர்கள், கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ் அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. மாதவராஜ் அவர்கள், உள்ளிட்ட காவல் துறையினர் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.