Police Department News

மதுரை, நாகமலைப்புதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்ற இருவர் கைது,நாகமலைபுக்கோட்டை H8, காவல்நிலைய காவலர்களின் அதிரடி நடவடிக்கை

மதுரை, நாகமலைப்புதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்ற இருவர் கைது,நாகமலைபுக்கோட்டை H8, காவல்நிலைய காவலர்களின் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை H 8, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அண்ணாதுரை அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நாகமலைப்புதுக்கோட்டை புல்லூத்து பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டார் அந்த நேரம் புல்லூத்து ஓடை அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு பேர் நின்று இருந்தனர், அவர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் கீழக்குயில்குடியை சேர்ந்த குணசேகரன் மகன் பிரபு, வயது 28, நாகமலைபுதுக்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் முத்துப்பாண்டி, வயது 23, என்பதும் தெரியவந்தது அவர்கள் போதை தரக்கூடிய மாத்திரைகள் வைத்திருந்ததும்,அவற்றை திண்டுக்கல்லில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் இருந்து வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த நாகமலைபுதுக்கோட்டை H8, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அண்ணாத்துரை அவர்கள் மேற்படி இருவர்களிடமிரந்து 90 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.