Police Department News

மதுரை சிந்தாமணி பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபர் படு கொலை, அவனியாபுரம் போலீசார் விசாரணை

மதுரை சிந்தாமணி பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபர் படு கொலை, அவனியாபுரம் போலீசார் விசாரணை

மதுரை சிந்தாமணி ஓம் சக்தி நகர் பகுதியே சேர்ந்தவர் அர்ஜூனன், இவரது மகன் முத்துகுமார் வயது 33/21, அந்தப் பகுதியில் உள்ள ஒரு கமபெனியில் வெல்டிங் வேலை செய்து வந்தார்

முத்துகுமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த அபிராமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேரும் வெவ்வேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள்.

வழக்கமாக காலையில் வேலைக்கு செல்லும் முத்துகுமார் மாலை 7 மணிக்கு வேலையை முடித்து வீட்டு வீட்டுக்கு வந்து விடுவார்.

ஆனால் நேற்று இரவு நீண்ட நேரமாகியும் முத்துகுமார் வீட்டிற்கு வரவில்லை செல் போனும் ஸவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது மனைவி அபிராமி மற்றும் உறவினர்கள் முத்துகுமாரை தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இது குறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள முட்புதரில் முத்துகுமாரின் மோட்டார் சைக்கிள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் திரு பிரபு மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. தண்டீஸ்வரன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முட்புதரில் முத்துகுமார் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. முகமும் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது.

உடனே போலீசார் உடலை கைப்பற்றி பிரைதப் பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துகுமார் மூன் விரோத காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

வேலைக்கு சென்ற தொழிலாளிகொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.