மதுரை, விராட்டிப்பத்து பகுதியில், இளம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த 2 கொள்ளையர்கள் கைது,
மதுரை விராட்டிபத்து இருளாண்டி காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சை இவரது மகள் பிரியா வயது 19, இவர் சம்பவத்தன்று பிறந்த நாள் கேக் வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டிற்கு சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 நபர்கள் பிரியா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்,
இது தொடர்பாக பிரியா எஸ.எஸ்.காலனி C3, காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் இடம் பெற்றுள்ள காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில் பிரியாவிடம் 2 வாலிபர்கள் செயின் பறித்த காட்சி பதிவாகி இருந்தது. காமராவில் பதிவாகி இருந்த உருவங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் செல்லம்பட்டியை சேர்ந்த சின்னமணி என்ற மணி, ஜெயபிரகாஷ் என்ற வாலாந்தூரான் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து எஸ.எஸ.காலனி போலீசார் மேற்கண்ட 2 கொள்ளையர்களை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 பவுன் தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. எஸ்.எஸ். காலனி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.