திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஒப்படைப்பு
திண்டுக்கல்லில் கொரோனா, ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே வருவோரை தடுக்க மாவட்ட எல்லைகளில் 11 காவல் நிலையங்களுக்கு இரண்டு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகனத் தனிக்கையில் ஈடுபட்டனர் இது வரை 6,400 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. எனவே பறிமுதல் செய்த வாகனங்களை திரும்ப அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா அவர்கள் உத்தரவிட்டார். அதன்படி இதுவரை 1500 க்கு மேற்பட்ட வாகனங்களை ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்
பட்டிருந்தால் உரிய ஆவணங்களை காண்பித்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.