Police Department News

மதுரை துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகர்ணங்களை வழங்கிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகர்ணங்களை வழங்கிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை அருகே மூன்று கிராமங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்.

மதுரை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மதுரை மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சார்பாக மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலாங்குளம், குலமங்களம், பொதும்பு ஆகிய பஞ்சாயத்தில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர், கையுறை மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் பாண்டியராஜா, ராஜ்குமார், குமார் (உறுப்பினர்கள் மற்றும் கண்காணிப்பு குழு) ஆகியோருடன் சமூக ஆர்வளர் கன்னாபீவி குலாம் உஷேன் மற்றும் கிருஷ்ணன் பாண்டி (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.