Police Recruitment

வேலைக்கு சென்ற கொத்தனார் வீடு திரும்பவில்லை தெற்கு வாசல் போலீசார் விசாரணை, தேடி வருகிறார்கள்

வேலைக்கு சென்ற கொத்தனார் வீடு திரும்பவில்லை தெற்கு வாசல் போலீசார் விசாரணை, தேடி வருகிறார்கள்

மதுரை அவனியாபுரம், வைக்கம் பெரியார் நகரில் வசிக்கும் சுரேஷ் மனைவி வஞ்சிகொடி வயது 39/21, இவர் இரும்பு பட்டரையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சுரேஷ் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வாசலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சாவப்பிரகாஷ் வயது 19/21, என்ற மகனும், பிரியதர்ஷினி வயது 17/21, என்ற மகளும் உள்ளனர். கணவர் தினசரி காலை 8.45 மணிக்கு வேலைக்கு சென்று இரவு 7 மணிக்கு வேலை முடித்து வீடு திரும்புவார். அதே போல் கடந்த 12 ம் தேதி காலையில் 9 மணிக்கு வீட்டில் தங்கி இருக்கும் உறவுக்காரர் மூவேந்திரன் உடன் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் இவரது மனைவி காலை 10 மணி சுமாருக்கு அவனியாபுரம் சந்தோஷ் நகரில் உள்ள இரும்பு பட்டரைக்கு வேலைக்கு சென்றுள்ளார், இவர் வேலை முடித்து இரவு 7 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் அவரது கணவர் இரவு 9 மணி வரை வீடு திரும்ப வில்லை, அதன்பின் அவரது கணவருடன் வேலை போர்க்கும் சசிபூசன் என்பவர் இரவு 9 மணிக்கு போன் செய்து உன் கணவருக்கு நைட் வேலை இருக்கு என்றும் அவருக்கு போன் செய்தால் போன் ஸ்விட் ஆப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் சுரேஷ் வீட்டிலிருந்தால் வேலைக்கு வரச் சொல்ல சொல்லியுள்ளார். அதற்கு தனது கணவர் வீட்டிற்கு வந்தவுடன் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். ஆனால் அன்று இரவு முழுவதும் அவர் வீட்டிற்கு வரவில்லை மறுநாள் காலையில் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் 13 ம் தேதி மதுரை தெற்குவாசல் B5, காவல் நிலையத்தில் தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி புகார் மனு கொடுத்துள்ளார், புகார் மனுவை பெற்றீக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி செல்வி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. K.ராமலிங்கம் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து காணாமல் போன இவரது கணவர் சுரேஷை தேடி வருகின்றனர், மஞ்சள்

Leave a Reply

Your email address will not be published.