Police Recruitment

நடு ராத்திரியில் மனநலம் பாதித்த இளம் பெண்ணை காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்த திருநகர் காவல் நிலைய காவலர்

நடு ராத்திரியில் மனநலம் பாதித்த இளம் பெண்ணை காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்த திருநகர் காவல் நிலைய காவலர்

மதுரை, திருநகர் W1, காவல் நிலைய சிறப்புசார்பு ஆய்வாளர் திரு.பாலகுமரன் அவர்கள் இன்று 22 ம் தேதி இரவு ரோந்து பணியில் இருந்த போது திருநகர் மூன்றாவது ஸ்டாப் அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றுவதை கண்டார் உடனே அவரிடம் சென்று விசாரித்த போது அவருக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை இரவு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. பாலகுமார் அவர்கள் அவரை மீட்டு தாய்மடி இல்லம் , சுரபி அறக்கட்டளையில் இன்று இரவு தங்க வைத்து விட்டு கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் அளித்துள்ளார், கொடுத்த தகவலில் அவரை தொடர்பு கொண்ட கண்ட்ரோல் ஆபீஸ் அவர் திருவாரூரில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ள லலிதாம்பிகை வயது 35, என்றும், அங்கு லதா என்று மற்றொரு பெண்ணும் உள்ளார். லதா என்பவரை வீட்டுக்கு அனுப்புவதற்கு பதிலாக அங்கு உள்ள வாடன் லலிதாம்பிகை என்பவரை மாற்றி அனுப்பி விட்டார் என்ற விபரத்தை தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் ஒரு அபலைப் பெண்ணை காப்பாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. பாலகுமார் அவர்களை போலீஸ் இ நியூஸ் பாராட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published.