Police Recruitment

நாமக்கல்லில் 2.70 டன் புகையிலை, குட்கா பறிமுதல்.

நாமக்கல்லில் 2.70 டன் புகையிலை, குட்கா பறிமுதல்.

நாமக்கல் மாவட்டத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு 43 பேரை கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இரவு முதல் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மளிகை கடைகள், குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2.70 டன் புகையிலை, குட்கா, பான் மசாலா பொருட்கள் மற்றும் 7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 43 பேரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.