Police Recruitment

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கோவில் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு திருடிய ஆசாமி கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கோவில் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு திருடிய ஆசாமி கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியை சேர்ந்தவர் பாண்டி வயது 55, இவர் அணை அருகே உள்ள வனக்காளியம்மன் கோவில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் கடந்த 17 ம் தேதி வழக்கம் போல் கோவிலுக்கு சென்று பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பாண்டி வைகை அணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார் கோவிலுக்குள் சென்று பார்த்த போது கோவிலில் இருந்த 5 ஆயிரம் மதிப்பிலான வெண்கலமணி, குத்துவிளகக்கு திருடு போனது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் குள்ளபுரத்தை சேரந்த ராஜாங்கம் மகன் விஜயகுமார் வயது 33, அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவன் கோவில் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. அவனிடமிருந்து வெங்கல மணியையும் குத்து விளக்கையும் பறிமுதல் செய்து, வைகை அணை போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவில் பூட்டை உடைத்து வெண்கலமணி, மற்றும் குத்துவிளக்கு திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.