Police Department News

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே கடற்கரை சாலையில் காய்கறி ஏற்றிச் சென்ற மினி லாரி மீது கார் மோதி விபத்து, இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலி, கூடன்குளம் போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே கடற்கரை சாலையில் காய்கறி ஏற்றிச் சென்ற மினி லாரி மீது கார் மோதி விபத்து, இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலி, கூடன்குளம் போலீசார் விசாரணை

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்நதவர் ஜோசப் இவருக்கு லிஜோ வயது,14 ஜிபின் வயது 11 இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் கார் கூடன்குளம் கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் காய்கறி ஏற்றிச் சென்ற மினிலாரியின் பின் பக்கம் மீது மோதியது. இதில் காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு சிறுவர்கள லிஜோ, வயது14 ஜிபின் வயது11 ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே இறந்தனர். ஜோசப் மற்றும் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலிலுள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கூடன்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.