Police Department News

ராமநாதபுரத்தில் 75வது சுதந்திர தின வைர விழா கொண்டாட்டம் சாதனையாளர்களுக்கு கலெக்டர் சந்திரகலா பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு!

ராமநாதபுரத்தில் 75வது சுதந்திர தின வைர விழா கொண்டாட்டம்
சாதனையாளர்களுக்கு கலெக்டர் சந்திரகலா பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு!

75வது சுதந்திர தின வைர விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூடுதல் ஆட்சித் தலைவர் பிரவீண் குமார் ஆகியோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில் வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 17 பொது பயனாளிகளுக்கு 9 லட்சத்து 10 ஆயிரத்து 11 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
விழாவில் காவல்துறை துணைத் தலைவர் மயில்வாகனன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மாவட்ட அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்
பங்கேற்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில் காவல்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, சமூக ஆர்வலர்கள் இது போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி கவுரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.