Police Recruitment

விருதுநகரில் முன் விரோத பகையின் காரணமாக அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்,கொலைக்கு காரணமாக இருக்கின்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர், அதன் விபரம் பின் வருமாறு…

விருதுநகர் மாவட்ட செய்திகள்:

-விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44)இவர் கட்டிட கட்டுமான பொருள்களை விற்பனை செய்து வருகிறார் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார், அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.
இவரக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஒடிவிட்டனார்
தகவலறிந்து விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவேல் ராஜன் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பேசப்படுகின்றது, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநில செய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.