Police Department News

வழிப்பறியில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு செங்குளம், நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் TNEB யில் ஒப்பந்த தொழிலாளராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 07.04.2021 அன்று பணி முடித்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும்போது பேரின்பபுரம் அருகே வைத்து அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வழிமறித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து 08.04.2021 அன்று முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று நபர்களில் ஐயப்பன் மற்றும் வானு என்ற வானுமாமலை ஆகிய இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எதிரியான திருநெல்வேலி ஜங்ஷன்,சி.என். கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற சாக்கையா வயது30 என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.