Police Department News

இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

இரு சமுதாயத்தினருக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ பதிவு வெளியிட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர், சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்த, முருகாண்டி, என்பவரின் மகன் கண்ணன் என்ற கந்தசாமி என்ற கண்ணபிரான் வயது 42 இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கு உள்ளது. இவர் கடந்த மாதங்களுக்கு முன்பு இரு சமுதாயத்தினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையிலும், பொதுஜன அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். இவர் பொதுஜன அமைதியை சீர் குலைத்து வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாலுகா காவல் ஆய்வாளர், திரு.பாலகிருஷ்ணன், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 28.08.2021 இன்று எதிரி கண்ணபிரான் குண்டர் சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.