Police Department News

முகமது முபாரக் வயது 30 , இவர் உக்கடை M.R.மில் தெரு வழியாக வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை மிரட்டி கையிலிருந்த பணம் 5000, மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை பறித்தனர்

முகமது முபாரக் வயது 30 , இவர் உக்கடை M.R.மில் தெரு வழியாக வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை மிரட்டி கையிலிருந்த பணம் 5000, மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை பறித்தனர்

அவர் தர மறுக்கவே அவரை தாக்கி காயம் ஏற்படுத்தி விட்டு ஏ.டி.எம், கார்டு, பணம் 5000, பர்ஸ் ஆகியவற்றை பறித்து கொண்டு ஓடி விட்டனர், உடனே முபாரக் காவல் நிலையம் வந்து புகார் அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் திரு. பரணிதரன் விரைந்து செயல்பட்டு திருடர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். திருடர்கள் பறித்து சென்ற செல்லுக்கு போன் செய்து செல்லை பறி கொடுத்த முபாரக் பேசுவது போல் ஆய்வாளர் பரணிதரன் அவர்கள் பேசினார் என் மனைவி கர்பமாக உள்ளார் தயவு செய்து ஏ.டி.எம் கார்டையும் செல்லையும் மட்டும் கொடுத்து விடுங்கள் என கெஞ்சினார், உடனே திருடர்கள் சரி மேல் கொண்டு 5000 ரூபாய் கொண்டு வா என கூறவே அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றனர் ஆனால் திருடர்கள சுதாரித்து கொண்டு தப்பியோடி விட்டனர், அதன் பின் போலீசார் விசாரித்ததில் அவர்கள் பெயர் மணிகண்டன், சன்ஜாத் என தெரிய வந்தது, இதில் சன்ஜித் என்பவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர் மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.