Police Department News

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும் வரை சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும் வரை சிறை

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதில் மகள் உள்ளார். சமீபத்தில் அடுத்தடுத்து அந்த சிறுமியின் தாய், தந்தை இறந்து விட்டனர், இதனால் மதுரை ஜீவா நகரில் உள்ள அவரது உறவினர் ஒருவர் வீட்டில் அந்த சிறுமி தங்கியிருந்தார் இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் வேலைக்கு சென்று விடுவார்கள் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 5 ம் தேதி அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி பசீர் அகமது கான் வயது 64/2021, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார், இது குறித்து தனது உறவினர்களிடம் சிறுமி தெரிவித்தார் அவர்கள் மதுரை மாநகர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் பசீர் அகமது கானை கைது செய்தனர் இந்த வழக்கு குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்தது. விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் திருமதி. கீதாலட்சுமி அவர்கள் விரைவாக விசாரித்து 50 நாட்களிலேயே இறுதி அறிக்கையை சமர்ப்பித்தார், இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்தது, இதனால் கைதான பசீர் அகமது கானுக்கு ஜாமீன் அளிக்கப்படவில்லை.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் ரூ. 60,000/− அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்பளித்தார். மேலும் அபராதத் தொகையில் ரூபாய்.50,000/− தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.