Police Department News

வழிமறித்து கத்தியை காட்டி செல்போனை கொள்ளையடித்த இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலையம்

வழிமறித்து கத்தியை காட்டி செல்போனை கொள்ளையடித்த இருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த நடராஜன் மகன் சசிகுமார் (39) என்பவர் 30.10.2021 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டையபுரம் ரோட்டில் உள்ள ஒரு மிட்டாய் கடை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது தூத்துக்குடி கே டி சி நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் வசந்தகுமார் (20), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் செல்வபிரபு (24) மற்றும் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திக் (28) ஆகியோர் சபரிகுமாரை வழிமறித்து கத்தியை காட்டி அவரிடமிருந்து ஒரு செல்போனை கொள்ளையடிக்கும் போது வசந்தகுமார் மற்றும் செல்வ பிரபு ஆகிய இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

இதுகுறித்து சபரிகுமார் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் வழக்கு பதிவு செய்து வசந்தகுமார் மற்றும் செல்வபிரபு ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 35,000/- மதிப்புள்ள ஒரு செல்போனை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.