Police Department News

முழு ஊரடங்கில் இரு சக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

முழு ஊரடங்கில் இரு சக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள துலுக்கநத்தம் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முத்துக்குமார் (46). இவர் தனது நண்பர் மணிகண்டன் வீட்டில் இரவு தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தை நண்பர் மணிகண்டன் வீட்டிற்க்கு அருகில் உள்ள காமராஜர் மன்றத்தில் நிறுத்தியிருந்தார்.
பின்னர் காலை எழுந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
உடனே அருகில் உள்ள அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.