Police Department News

மதுபாட்டில் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

மதுபாட்டில் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் மாவட்ட தனிப்படை மற்றும் உட்கோட்ட தனிப்படையினர் இருக்கும் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்தி வரும் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்கள்.

அதனடிப்படையில் மாவட்ட தனிப் படையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட
500 வீடு காலனி, இடையபட்டியை சேர்ந்த
கவிதா வயது 35
W/O மைனர்
(தலைமறைவு) என்பவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்ததில் 192 பாட்டில்கள் (1 பாட்டிலின் அளவு 180 மில்லி) சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது . பின்னர் மேற்படி சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ. பாஸ்கரன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.