Police Department News

மதுரை கரும்பாலையை சேர்ந்த வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

மதுரை கரும்பாலையை சேர்ந்த வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

மதுரை கரும்பாலை கிழக்கு தெருவை சேர்ந்தாவர் மணிகண்டன் வயது 23/22, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. மணிகண்டன் இரவு அதே பகுதியில் உள்ள காய்கறி கடைக்கு சென்றார்.அங்கே நடுத்தெரு இசக்கிமுத்து வயது 24/22, என்பவர் நடு ரோட்டில் மணிகாண்டனை வழி மறித்து தகராறு செய்துள்ளார் இருவருக்கும் வாக்கு வாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது இதில் மணிகண்டனுக்கு கத்தி குத்து விழுந்தாது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சாதுரமேஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தார் இதே வழக்கில் இசக்கிமுத்து கொடுத்த புகாரின்படி மணிகண்டனையும் கைது செய்தனர். இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.