Police Department News Police Recruitment

விருதுநகர் மாவட்ட செய்திகள்

*விருதுநகர் மாவட்ட செய்திகள்:-
காவலர் இரங்கல் செய்தி:-
அருப்புக்கோட்டை சப்டிவிசனுக்குட்பட்ட
திருச்சுழி அருகே எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டையாவாக பணிபுரிந்து வந்த சாம்பிரேம்ஆனந்த் முத்துராமலிங்கபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது,அத்துடன் தலைக்கவசம் அணிந்து சென்று கொண்டிருந்தநிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததில் நிலைதடுமாறி எதிரே இருந்த பேரிக்கார்டு மீது மோதி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் கல்லூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் இதனால் காவல் துறை வட்டாரங்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.