Police Department News

தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு.

தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் காவல் ஆணையரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் வரை பலர் கலந்துக்கொண்டனர்.

உறுதிமொழி

“நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றைக் தாக்கவும், வலுப்படுத்தவும், என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன்
என்று மனமார உறுதி கூறுகிறேன்”.

“நான் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்றும், மதம்,
மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அமைதியான முறையிலும், அரசியல் சட்டத்திற்குட்பட்டும், தீர்வுகாணத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட நிருபர் ம.சசி

Leave a Reply

Your email address will not be published.