Police Department News

மதுரை மேலமாசி வீதியில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்

மதுரை மேலமாசி வீதியில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்

மதுரை மேல மாசிவீதியயில் உள்ள பாப்புலர் ஏஜன்ஸி கடை அருகே கடந்த 18 ம் தேதி இரவு மிகவும் சொர்வான நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறு நாள் இரவு பரிதாபமாக இறந்தார். அவர் யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை இடது பக்க மார்பிலும் வலது தொடையிலும் கருப்பு மச்சம் உள்ளது. நெற்றியில் காயத்தலும்பு காணப்படுகிறது இது குறித்து மதுரை திடீர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுரேஸ் சார்பு ஆய்வாளர் திரு. ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வாருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.