Police Department News

மறைந்த அலங்காநல்லூர் காவல் நிலைய காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் பண உதவி

மறைந்த அலங்காநல்லூர் காவல் நிலைய காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் பண உதவி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த திரு மகேந்திரன் என்பவர் தன்னுடைய வீட்டில் இருந்தபோது கடந்த 19.1.2022 ம் தேதி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மேற்படி மகேந்திரன் அவர்கள் கடந்த 2008ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார்.

இதனை அடுத்து அவருடன் காவல்துறை பணியில் சேர்ந்த 2008ஆம் ஆண்டு காவலர்கள் அவருக்காக ஒரு குழு அமைத்து நிதி வசூல் செய்தனர். அவ்வாறு நிதி வசூல் செய்த ரூபாய் 16,05,000/- ஐ இன்று 10.5.2022 ஆம் தேதி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் அவரது குடும்பத்தாரிடம் வழங்கினர்.

மேற்படி மகேந்திரன் அவர்களுக்கு எல்ஐசி வரப்பெற்ற ரூபாய் 10, 95, 599, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 5 லட்சம் மற்றும் கையிருப்பு தொகையாக ரூபாய் 9500 ஆகியவற்றை மேற்படி 2008 ஆண்டு காவல்துறை நண்பர்கள் குழு மூலம் பெற்று காவல் கண்காணிப்பாளர் அன்னாரது குடும்பத்திற்கு வழங்கினர்.

மேற்படி பலன்களை பெற்றுக்கொண்ட மகேந்திரன் அவர்களது குடும்பத்தினர் காவல்துறை நண்பர்களுக்கும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.