பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள். காவல் ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிதல் சாலை விதிகளை பின்பற்றுதல் குழந்தை திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு போதை பழக்கத்திற்கு ஆளாகாதே ஆகிய பதாகையை ஏந்தி பாலக்கோடு முக்கிய சாலையிலான எம் ஜி ரோடு பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை பாலக்கோடு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
கஞ்சா விற்ற 4 பேர் கைது சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று முன்தினம் ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலை அருகே உள்ள பூங்காவில் ஓட்டேரி போலீசார் சந்தேகத்தின் பேரில் 4 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்த ஓட்டேரி பகுதியைச் […]
கோவில்பட்டி அருகே மனைவியை கொன்ற கணவர் தப்பியோட்டம்! கோவில்பட்டி அருகே மனைவியை கொன்றுவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(56). இவரது மனைவி மருதம்மாள்(54). இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் இன்னாசிமுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இன்னாசிமுத்து வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது, மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் […]
சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பதொடங்கி வைத்தார். இன்று 22.4.2021 காலை போக்குவரத்து காவல் சார்பில் அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கொரோனா விழிப்புணர்வுடன் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தும்.கலந்துகொண்ட அனைவர்க்கும் கபசுரகுடிநீர் வழங்கினார்.உடன் திரு […]