பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள். காவல் ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிதல் சாலை விதிகளை பின்பற்றுதல் குழந்தை திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு போதை பழக்கத்திற்கு ஆளாகாதே ஆகிய பதாகையை ஏந்தி பாலக்கோடு முக்கிய சாலையிலான எம் ஜி ரோடு பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை பாலக்கோடு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.தேனி மாவட்டம்10.10.2024தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணையில் வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கும், கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்ட […]
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு 17 செயலிகள் நீக்கம் கூகுள் நிறுவனம் அதிரடி போனில் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக 17 கடன் வழங்கும் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான செயலிகள் இடம் பெற்றுள்ளன. அதில் விதிகளை மீறும் செயலிகள் மற்றும் சட்ட விரோதமான செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்குவது வாடிக்கை அந்த வகையில் தற்போது 17 செயலிகளை கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் […]
உங்கள் துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு மத்திய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாமல் 15 கொலை வழக்குகளும் (திருச்சி 4, புதுக்கோட்டை 1, பெரம்பலூர் 2, அரியலூர் 2, தஞ்சாவூர் 5, மயிலாடுதுறை 1) மற்றும் 3 ஆதாயக் கொலை வழக்குகளும் (புதுக்கோட்டை 1, திருவாரூர் 1, மயிலாடுதுறை 1) நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளை கண்டுபிடிக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மத்திய மண்டல காவல்துறை தலைவரால் அழைக்கப்படுகிறார்கள்இவ்வழக்குகளை கண்டுபிடித்து தருபவருக்கு அல்லது வழக்குகள் கண்டுப்பிடிக்க பயனுள்ள […]