பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள். காவல் ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிதல் சாலை விதிகளை பின்பற்றுதல் குழந்தை திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு போதை பழக்கத்திற்கு ஆளாகாதே ஆகிய பதாகையை ஏந்தி பாலக்கோடு முக்கிய சாலையிலான எம் ஜி ரோடு பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை பாலக்கோடு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் பார்த்த ரசிகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு- 2 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிளை சந்தேகப்படும்படியான 2 பேர் தள்ளிச் சென்ற போது அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் சக்திவேல், அவர்களை பிடித்து விசாரித்தார்.அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.சென்னை சூளைமேடு பாரி தெரு அவ்வை நகரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (38). சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்க […]
சென்னை: சைதாப்பேட்டை ரேஷன் கடையில் 7.36 லட்சம் ரூபாய் திருடியவர் கைது சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இயங்கிவந்த ரேஷன் கடையில் 7.36 லட்சம் ரூபாயை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் கோபி என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து 4.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள கோபி இதற்கு முன்னதாக 6 குற்ற வழக்குகளில் கைதாகி தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், இந்த திருட்டுசம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட […]
மேலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து- 20 பெண்கள் படுகாயம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாளப்பட்டி, புலிப்பட்டி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் மூலம் வேலைக்கு சென்று வந்தனர். இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. வள்ளாளப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த […]