Police Department News Traffic Police News

சென்னையில் இன்று ஜோதி ஓட்டம், போக்கு வரத்து மாற்றம்

சென்னையில் இன்று ஜோதி ஓட்டம், போக்கு வரத்து மாற்றம்

44 வது ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னையில் இன்று ஜோதி ஓட்டம் நடைபெற இருப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை போக்குவரத்து போலிசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 27 ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை ஜோதி ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் MP MLAகள் அரசு உயர் அலுவலர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஜோதி ஓட்டம் மாநில கல்லூரி மைதானாத்தில் தொடங்கி காமராஜ் சாலை ராஜாஜி சாலை கொடிமரச்சாலை பல்லவன் சாலை சென்ரல் சதுக்கம் ஈ.வெ.ரா சாலை ராஜா முத்தையா சாலை வழியாக உள் விளையாட்டு அரங்கத்தை அடைய உள்ளது. எனவே சென்னை போக்கு வரத்து போலிசாரால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்காள் தங்கள் பயண திட்டத்தை அற்கேற்ப வடிவமைத்து கொள்ள வேண்டும்.
மேலும் சென்ரல் ரயில் நிலையத்திற்கு வர திட்டமிட்டுள்ளவர்கள் சற்று முன்பாகவே தங்களின் பயண நேரத்தை வடிவமைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.