Police Department News

மேலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து- 20 பெண்கள் படுகாயம்

மேலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து- 20 பெண்கள் படுகாயம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாளப்பட்டி, புலிப்பட்டி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் மூலம் வேலைக்கு சென்று வந்தனர்.

இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. வள்ளாளப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த புவனேசுவரி, ராவித், அழகுநாச்சி, விசாலினி, ஜெயலட்சுமி உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து தொடர்பாக மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.