Police Department News

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு சென்னையில் 168 இடங்களில் நடந்தது

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு சென்னையில் 168 இடங்களில் நடந்தது

சென்னையில் மாணவிகள் பெண்கள் முதியவர்கள் ஆபத்து மற்றும் அவசர நேரங்களில் ஒரே பட்டனை அழுத்தி போலிசாரை அழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காவல் உதவி செல் போன் செயலியை தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 4 ம் தேதி தொடங்கி வைத்தார் இந்த செயலியின் நன்மைகள் பயன்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்து போலிசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் அவர்களின் உத்தரவின் பேரில் 105 பள்ளிகள் 10 கல்லூரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் 53 இடங்கள் என மொத்தம் 168 இடங்களில் போலிசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.காவல் உதவி செயலி தொடங்கப்பட்டதிலிருந்து 514 பள்ளிக்கூடங்கள் 61 கல்லூரிகள் என மொத்தம் 575 கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ மாணவிகள் 17443 பேர் கல்லூரி மாணவ மாணவிகள் 4 ஆயிரத்து 95 பேர் என மொத்தம் 21 ஆயிரத்து 538 பேர் காவல் உதவி செயலியை தங்களது செல் போனில் பதிவிரக்கம் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.