Police Department News

மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி திடீர் ஆய்வு

மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி திடீர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புக்கள் மற்றும் காவல் நிலைய பதிவேடுகளை டி.எஸ்.பி சிந்து திடீர் ஆய்வு செய்தார்.
மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த கோப்புக்களின் நிலையினை ஆய்வு செய்த பாலக்கோடு உட்கோட்ட டி.எஸ்.பி சிந்து ஆய்வின் போது நிலுவையில் உள்ள வழக்கு விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்,
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் தீர்வு கான ஆலோசனை வழங்கினார்.இந்த ஆய்வின் போது காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ்குமார் வட்ட எழுத்தர் முனியம்மாள், முகாம் அலுவலர் எழுத்தர் ராஜா மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.