Police Department News

ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் குட்கா பறிமுதல்

ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் கடந்த 7-ந் தேதி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களுருவில் இருந்து தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை மொத்தம் 500 கிலோ இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பஸ் டிரைவர் மற்றும் கிளீனரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து மதுரைக்கு குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் பஸ் டிரைவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பிரகாஷ் நகரை சேர்ந்த ரஞ்சித் (வயது 28), பெங்களூரு பீஜ்பூர் பசந்த் பாத்தியா பகுதியை சேர்ந்த கினீனர் பாபு (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பஸ்சில் கடத்தி வந்த ரூ.2½ லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பஸ்சை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் N.சேகர்

Leave a Reply

Your email address will not be published.