Police Department News

போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும்

மதுரை மாநகர போலீ சார் பறிமுதல் செய்த 29 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோ மற்றும் 3 கார்கள் உள்பட 35 வாகனங்கள் கிரைம் பிராஞ்ச் போலீஸ் கிளப் வளாகத்தில் உள்ளது. இவை வருகிற 19-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வருகிற 17-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இரு சக்கர வாகனத்துக்கு ரூ.2000, ஆட்டோ மற்றும் காருக்கு தலா ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

அதற்கு முன்பாக இன்று (15-ம் தேதில் மற்றும் 16, 17ந் தேதிகளில் வாகனங்களை நேரில் பார்வையிடலாம். வருகிற 19-ம் தேதி நடக்கும் ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.