Police Department News

அவனியாபுரம் நான்குவழி சாலையில் விபத்து மதுரை மாநகர போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் அவனியாபுரம் போக்குவரத்துஆய்வாளர் சார்புஆய்வாளர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு

அவனியாபுரம் நான்குவழி சாலையில் விபத்து மதுரை மாநகர போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் அவனியாபுரம் போக்குவரத்துஆய்வாளர் சார்புஆய்வாளர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சிவனம்மாள் (வயது 55) இவர் மதுரை ரிங் ரோட்டில் அமைந்துள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு 7.30 மணியளவில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயலும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.