கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி
30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00 மணிக்கு ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராம்கேவால்-அனிதா தம்பதியரின் 6 மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விட்டதாக ஓசூர் நகர காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாகூர் இ.கா.ப., அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தன் அவர்கள், திரு. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் மற்றும் ஓசூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து ஓசூர் நகரத்தின் அனைத்து கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை கடத்திச் சென்ற 3 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார். மேலும் குழந்தையை கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம்:–அருப்புக்கோட்டையில் கலாம் மாணவர்கள் இயக்கம் சார்பில்வாகனங்களில் முகப்பு விளக்குகளில் ஒளியை கட்டுப்படுத்த கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை புறநகர் பேருந்து பகுதியான காந்தி நகரில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அருப்புக்கோட்டை மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் திரு. கண்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேருந்துகள், லாரிகள்,கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் […]
மாரண்டஅள்ளியில் ஏ.டி.எம்.மில் பொதுமக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்த பிரபல ஏ.டி.எம் திருடன் கைது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் ஏ.டி.எம்.மையங்களுக்கு பணம் எடுக்க வரும் எழுத படிக்க தெரியாதா, அப்பாவிகளுக்கு பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களின் ஏ.டி.எம் கார்டு மற்றும் இரகசிய குறியீடு நெம்பரை பெற்று பின் உங்கள் ஏ.டி.எம் கார்டு வேலை செய்யவில்லை வங்கியில் சென்று கேளுங்கள் என கூறி தன்னிடம் உள்ள வேறொரு ஏ.டி.எம் கார்டு கொடுத்து அனுப்பி விட்டு, உடனடியாக வேறு பகுதியில் […]
3 மாத குழந்தை கடத்தல் பெண் உள்பட இருவர் கைது மதுரை ரயில்வே நிலையத்தில் உறங்கி கொண்டிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த சையதலி பாத்திமா என்பவர்களது 3 மாத குழந்தை ஷாலினியை போஸ் வயது 34, மற்றும் அவரது பெண் நண்பர் கலைவாணி வயது 33, இருவரும் சேர்ந்து கடத்தி சென்றனர் இது குறித்து தகவல் அறிந்து வந்த திலகர் திடல் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது […]