Police Department News

குழந்தைகள் தின விழா – சைல்டு லைன் 1098 கொண்டாட்டம்

குழந்தைகள் தின விழா – சைல்டு லைன் 1098 கொண்டாட்டம்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி சைல்டு லைன் 1098 சார்பில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் முதலாவதாக கையெழுத்து இயக்கத்தில் கையொப்பம் மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு கையில் “நான் உங்கள் நண்பன்” என்னும் பேண்ட் கட்டப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் இரயில்வே DCM. மோகனப்பிரியா Asst.Sr. DSC சின்னத்துரை மற்றும் இரயில் நிலைய மேலாளர் விருத்தாச்சலம், GRP ஆய்வாளர் மோகனப் பிரியா, RPF ஆய்வாளர் தேவேந்திரன், குழந்தைகள் நல குழு தலைவர் மோகன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ஸ்ரீவித்யா, நோடல்.முரளிகுமார் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை சேவை இயக்குநர் கோவிந்தராஜ் இணை இயக்குநர் சுதா வழிகாட்டுதலின்படி, இரயில்வே சைல்டுலைன் 1098 திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.சுகுமாறன் மற்றும் சைல்டுலைன் குழு இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.