Police Department News

தானமாக பெற்ற உடல் உறுப்புக்களை 10 நிமிடத்தில் மதுரை விமான நிலையம் சென்றடைய உதவிய போக்குவரத்து காவல் துறையினர்

தானமாக பெற்ற உடல் உறுப்புக்களை 10 நிமிடத்தில் மதுரை விமான நிலையம் சென்றடைய உதவிய போக்குவரத்து காவல் துறையினர்

இன்று காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு தானமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது ஒரு ஆம்புலன்ஸ் 10 40 மணிக்கு மற்றொரு ஆம்புலன்ஸ் 10 50 மணிக்கு புறப்பட்டது இரண்டு ஆம்புலன்ஸ்களும் சரியாக 15 நிமிடத்தில் மதுரை விமான நிலையம் அடைந்தது இதனுடன் லிவர் மட்டும் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது இந்த மூன்று ஆம்புலன்ஸ் களையும் தகவல் தெரிவித்த பத்து நிமிடங்களுக்குள் ஆங்காங்கே சிக்னல்களில் சென்று மதுரை மாநகர போக்குவரத்து காவலர்கள் ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆறுமுகசாமி மதுரை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் திருமலை குமார் மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சார்பாய்வாளர்கள் காவலர்கள் உதவி செய்தனர் உடல் உறுப்பு தானம் கொடுத்த நபர்… உயர்திரு.. முத்து சங்கர் வயது 28… தேனி ஆனந்தம் துணிக்கடையில் பணி புரிந்து வந்தவர் கோரிப்பாளையம் மூங்கில் கடை அருகில் கடந்த 14 11 22 அன்று சாலை விபத்திற்கு உள்ளானதால் மூளைச்சாவுக்கு சென்றவரை அவரது இல்லத்தார் மேற்கண்ட இதயம் நுரையீரல் லிவர் உடல் உறுப்பு தானமாக வழங்கினார்.. மேற்கண்ட இதயம் நுரையீரல் சென்னை விமான நிலையத்திலிருந்து வேலா தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது

Leave a Reply

Your email address will not be published.