Police Department News

பிக்கிலிகாப்புக் காட்டில் வன பகுதியை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்த இருவர் கைது .

பிக்கிலிகாப்புக் காட்டில் வன பகுதியை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்த இருவர் கைது .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கிலிகாப்புக் காட்டு பகுதியில் கொட்டகை அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்க்கு சென்ற வனத்துறையினர் மலையூர் பகுதியை சேர்ந்த சஞ்சீவன் (வயது .45), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (வயது. 37) ஆகியோர் அனுமதியின்றி யானைகள் செல்லும் வழித்தடத்தில் கொட்டகை அமைத்தும், காட்டுமரங்களை வெட்டி, ஆட்டுபட்டி அமைத்து, நாய்களை வைத்து வனவிலங்குகளை விரட்டி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த வனச்சரகர் நடராஜ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.