Police Department News

திருச்சியில் 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்

திருச்சியில் 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்

திருச்சி பீமநகரில் தனியார் குளிர்பான நிறுவனம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வழக்குப்பதிவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் தயாரித்து விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரமேஷ் பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.