மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சோதனை சாவடி திறப்பு
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் சார்பில் அச்சம் பத்து நான்கு வழி சாலையில் 24X7 சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்க கூடிய சோதனை சாவடி நாளை 06.02.2023 திங்கட்கிழமை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் திரு. R. சிவபிரசாத் IPS அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைக்கிறார். உடன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. R. பாலசுந்தரம் B.Sc, B.Ed.அவர்கள் முன்னிலையிலும் காவல் ஆய்வாளர் B. சிவக்குமார் B.B.A. அவர்கள் ஒருங்கிணைப்பில் திறந்து வைக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை:- பாரத திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிட வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகர் காவல் நிலையத்தில் நாட்டின் 79 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு நாட்டின் மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது காவலரின் முன்னிலையில் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அது சமயம் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. VRK.ஜெயராமன் […]
விபத்து பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதல்: ஒருவர் பலி- 22 பேர் படுகாயம் ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு பாலி அலுமினிய குளோரைடு என்ற ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் தேவராஜ் என்பவர் ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் திண்டுக்கல்-பழனி சாலை கன்னிவாடி அருகே தெத்துப்பட்டி புதுப்பாலம் அருகே வந்தபோது லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனையடுத்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அப்பகுதியில் ஏதேனும் பழுது நீக்கும் […]
என்.ஐ.ஏ.,வில் புகார் அளித்த வழக்கறிஞரிடம் விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அமைப்பிடம் புகார் அளித்த மதுரை வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். பி.எப்.ஐ., உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும், அவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் என்.ஐ.ஏ.,விற்கு புகார் அளித்ததன் பேரில் இவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னர், டி.ஜி.பி., மதுரை கலெக்டருக்கு இவர் மீண்டும் அனுப்பிய மனுவில், ‘ஹிந்து அமைப்புகளை சேர்ந்த சிலரை குறிவைத்து […]