மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சோதனை சாவடி திறப்பு
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் சார்பில் அச்சம் பத்து நான்கு வழி சாலையில் 24X7 சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்க கூடிய சோதனை சாவடி நாளை 06.02.2023 திங்கட்கிழமை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் திரு. R. சிவபிரசாத் IPS அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைக்கிறார். உடன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. R. பாலசுந்தரம் B.Sc, B.Ed.அவர்கள் முன்னிலையிலும் காவல் ஆய்வாளர் B. சிவக்குமார் B.B.A. அவர்கள் ஒருங்கிணைப்பில் திறந்து வைக்கிறார்.
ரிசர்வ் வங்கி அதிரடி…ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி, புதிய விதிகள் என்ன ? இந்தியாவில் நிச்சயமாக வெகுவேகமாக, டிஜிட்டல் பணம் செலுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால் இப்போது பல்வேறு நோக்கங்களுக்காக பண பரிவர்த்தனை தேவைப்படும்போது, மக்கள் பெரும்பாலும் ஏடிஎம்கள் மூலம் பரிவர்த்தனை செய்கிறார்கள். ஏடிஎம்கள் மிகவும் வசதியானவை என்றாலும், சில சமயங்களில் அது உங்களை சிக்கலில் ஆழ்த்துகிறது. பல முறை ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது பணம் வரவில்லை. ஆனால் உங்கள் கணக்கில் இருந்து பணம் […]
எஸ்.பி. தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்மந்தமாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.இந்தக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி.கள் விளாத்திக்குளம் பிரகாஷ், கோவில்பட்டி உதயசூரியன், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், தூத்துக்குடி மதுவிலக்கு பாலாஜி, […]
விருதுநகர் மாவட்டம்:- தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக பொங்கல் பண்டிகையானது தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பெயரை கூறும் படியாக சமத்துவ பொங்கல் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் (சட்டம் ஒழுங்கு) திருமதி.ராஜபுஷ்பா ஆய்வாளர் (குற்றபிரிவு) ஆகியோர் கலந்துகொண்டனர். காவல் நிலையத்தின் நுழைவு வாயிலில் பொங்கல் வைக்கப்பட்டது பின்னர் பொங்கல் படையலிடப்பட்டதுஅதன் பின்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்சியில் காவல் நிலைய காவல் […]