Police Department News

சென்னையில் கதவை திறந்து வைத்து தூங்கியபோது 3 வீடுகளில் செல்போன் கொள்ளை

சென்னையில் கதவை திறந்து வைத்து தூங்கியபோது 3 வீடுகளில் செல்போன் கொள்ளை

கோடம்பாக்கம், சொர்ணாம்பிகை தெருவில் உள்ள வீட்டின் 3-வது தளத்தில் நண்பர்களுடன் வசித்து வருபவர் விக்னேஷ். சினிமாத்துறையில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு அவர் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து விலை உயர்ந்த செல்போனை திருடி சென்று விட்டனர்.

இதேபோல் அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடிகளில் வசித்து வரும் கூலி தொழிலாளிகள் சுரேஷ் மற்றும் வடமாநில தொழிலாளி சகிந்தர் ஆகியோரின் வீடுகளிலும் செல்போன்கள், ரூ.1000 ரொக்கம், சார்ஜர்கள் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர். மொத்தம் 6 செல்போன்கள் கொள்ளைபோய் இருந்தது. இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.