Police Department News

ஆட்டோ ஓட்டுநருக்கு ஆறுதலளித்த காவல் ஆணையர்

ஆட்டோ ஓட்டுநருக்கு ஆறுதலளித்த காவல் ஆணையர்

மதுரை¸ அவனியாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் என்பவர் வாட்சப்பில் வெளியிட்டிருந்த வீடியோ வைரலானது. இதில்¸ தான் ஆட்டோவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்ததாகவும்¸ திரும்பி வரும்போது போலீசார் தனக்கு ரூ.500 அபராதம் விதித்ததாகவும்¸ தான் விளக்கி கூறியும் போலீசார் கண்டுகொள்ளவில்லை எனவும் ¸ மனித நேயம் கொண்ட போலீஸ் அதிகாரிகள் பார்த்தால் கொஞ்சமாவது தயவு காட்டுங்கள் என தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியிருந்தார். இந்த வீடியோ மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா¸ இ.கா.ப.¸ அவர்களின் கவனத்திற்கு சென்றது. இது குறித்து விபரங்களை கேட்டறிந்த காவல் ஆணையர் அந்த ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராத தொகையை ரத்து செய்து உத்தரவிட்டதுடன்¸ முழுமையான விசாரணைக்கு பிறகே அபராதம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.காவல் ஆணையரின் துரித நடவடிக்கையை பலரும் பாராட்டிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.