Police Department News

கோயம்புத்தூர்பொள்ளாச்சியில் மாணவியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்

கோயம்புத்தூர்
பொள்ளாச்சியில் மாணவியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.

இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது 10-ம் வகுப்பிற்கு தேர்வு நடந்து வருவதால் மாணவிக்கு மதியத்திற்கு பிறகே வகுப்புகள் தொடங்கும்.

சம்பவத்தன்று, மாணவி, பள்ளி செல்வதற்காக புறப்பட்டு தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வந்தார்.

குடிபோதையில் இருந்த அவர், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அவரை பார்த்த மாணவி, சத்தம் போட முயன்றார். அதற்குள் வாலிபர், மாணவியின் வாயை பொத்தி அவரை வீட்டில் இருந்த அறைக்குள் தூக்கி சென்றார்.

அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்து தப்பிக்க மாணவி எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அவர் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார்.

அப்போது வீட்டிற்கு மாணவியின் தம்பி வந்து விட்டார். அவர் சத்தம் கேட்டு அறைக்கு சென்றார். இதை பார்த்த சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இவர் கடந்த 2021-ம் ஆண்டு மாணவியிடம் பழகி வந்ததாகவும், இதனை மாணவியின் குடும்பத்தினர் தட்டி கேட்டதால், அவர்களது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்ததும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.