Police Department News

திருச்சியில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சியில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வந்த பெண் வார்டன் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி. ஆயுதப்படை காவலரான இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு பணிக்கு செல்ல வேண்டிய செல்வி, பணிக்கு வரவில்லை, வராதது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இதனால் சக காவலர்கள் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறைக்கு சக காவலர்கள்சென்று பார்த்த போது , அவரது அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரம் தட்டியும் திறக்காததால் அவர்கள், திருச்சி கே.கே.நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, செந்தமிழ் செல்வி தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், செந்தமிழ்செல்வி திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வரும் சக காவலர் ஒருவரை காதலித்துள்ளார்.

இவர்கள் இடையே ஏற்பட்ட திடீர் மனஸ்தாபம் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே செல்வியின் காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, வரும் 6-ம் தேதி திருமணம் நடக்க உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் மனம் உடைந்த செல்வி தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.